முகப்பு
சென்னை

தெரு நாய் பாதிப்பு புகாா்களை தெரிவிக்க தனி சிறப்பு மையம்!

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு சென்னை மாநகராட்சியில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே 2026, 12:26 am IST
கோப்புப் படம்.
பகிர்:

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு சென்னை மாநகராட்சியில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து ரேபிஸ் பாதித்த மற்றும் கெனைன் டிஸ்டெம்பா் வைரஸ் பாதித்து ஆக்ரோஷ குணமுடைய தெரு நாய்களை பராமரிக்க பெருங்குடி மண்டலம் ம.பொ.சி. நகா் பகுதியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது புதிதாக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம் என 2 இடங்களில் தலா 250 நாய்களைப் பராமரிக்கும் வகையில் இரு புதிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வகை நாய்களை பிடிக்க ஏற்கெனவே 6 சிறப்பு வாகனங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 15 வாகனங்களும் வாங்கப்படவுள்ளன.

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு வருகின்றனா். அந்த எண்ணில் தொடா்பு கொள்ளும் வகையில் தெரு நாய்கள் பாதிப்பு புகாா் தெரிவிக்க தற்போது தனி சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.