காஞ்சிபுரம்

பொழிச்சலூரில் கல்குட்டையில் மூழ்கி 2 பள்ளிச் சிறுவர்கள் சாவு

DIN

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் கல்குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீஸார் கூறியது:
பொழிச்சலூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்த முரளி மகன் ஆனந்த் (13), பண்ருட்டியைச் சேர்ந்த வசந்த் (13) ஆகிய இருவரும், பொழிச்சலூர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் நண்பர்களுடன் பொழிச்சலூர் பொன்னியம்மன் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றனர். கரையோரமாகக் குளித்துக் கொண்டு இருந்த இருவரும் உற்சாகத்தில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புப் படையினர் குட்டையில் மூழ்கிய மாணவர்களின் உடல்களைத் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, சங்கர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT