கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிங்க பெருமாள் கோவில் பஜார் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இந்து முன்னணி அமைப்பாளர் சி.ஆர்.ராஜா தலைமை வகித்தார். சரவணன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்துமுன்னணியின் மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் டி.கே.குருமூர்த்தி, ஆர்.டி.பழனி, மாவட்ட அமைப்பாளர் பா.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர் கே.விஸ்வாஸ் நன்றி தெரிவித்தார்.