முகப்பு
காஞ்சிபுரம்

கிறிஸ்துமஸ் விழாவில் 30 குடும்பங்களுக்கு நல உதவிகள்

ஒரத்தூர் சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 30 இருளர் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 26 டிசம்பர் 2018, 3:14 am IST
பகிர்:


ஒரத்தூர் சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 30 இருளர் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஒரத்தூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. ஆயர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆலய நிர்வாகிகள் ஜோசப் சாந்தகுமார், ஜெபராஜ், மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடப்பட்டதுடன், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ஒரத்தூர் பகுதியில் வசிக்கும் 30 இருளர் இனக் குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments