உஜ்வலா திட்டத்தில் 5 கிலோ சிலிண்டர் வழங்கல்
மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அரப்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி அந்த கிராமத்தில் நடைபெற்றது.
சென்னை மண்டல விற்பனை மேலாளர் சனல்குமார் தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கினார். மேல்மருவத்தூர் கற்பக விநாயகா கேஸ் ஏஜென்சி நிறுவனர் இ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.