காஞ்சிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள 5 வகையான அரிமா சங்கங்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சுப்புராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமினை அரிமா சங்கங்களின் ஆளுநர் அன்பு தொடங்கி வைத்தார்.
முகாமில் காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகள், சுற்றியுள்ள கிராமப்பகுதிகள் ஆகியவற்றில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை உள்பட சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோரை மருத்துவர்கள் பரிசோதித்து, சிகிச்சை அளித்தனர்.