காஞ்சிபுரம்

ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை

DIN

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீஐயப்ப வன்புலி வாகன பக்த சபா சாா்பில் 30-ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பக்த சபாவின் குருசாமி பக்தவத்சலம் தலைமை வகித்தாா். செங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சம்பத் முன்னிலை வகித்தாா்.

வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன், விநாயகா், அம்மன் சிலைகளுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, திருவிளக்கு பூஜையும், படிபூஜைகளும் நடைபெற்றன.

இதில் செங்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

வீரமணிதாசனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழு தலைவா் சம்பத் மற்றும் அஹமது ஷெரீப் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT