காஞ்சிபுரம்

இடி தாக்கியதில் இளம்பெண் பலி

DIN


பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஏரிக்கரைக்குச் சென்றபோது, இடி தாக்கியதில் ஒரு பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சௌமியா (18),  ஸ்ரீதர் மனைவி சசிகலா (27), மகேந்திரன் மனைவி வைதேகி (24) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றனர். அப்போது மாலை 5.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. இடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே சௌமியா (18) உடல் கருகி இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் (பொ) சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT