காஞ்சிபுரம்

ரூ.6 லட்சம் மதிப்புள்ள நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN


ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகளை காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை பகுதியில் காத்தலிங்கம் (55) என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் அரசு உத்தரவை மீறி  நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில், நகராட்சி நகர் நல அலுவலர் முத்து தலைமையில் 10 பேர் கொண்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அங்கிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகள் அனைத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தக் கிடங்குக்கு சீல் வைத்து நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT