காஞ்சிபுரம்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN


செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் பகுதியில் குடும்பத் தகராறில் மனமுடைந்த மனைவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் கிராமம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசூர்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்நிலையில், புதன்கிழமை காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கணவர் செல்வநாயகம் வெளியே சென்றபின், ஜெயசூர்யா மின் விசிறியில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  
அருகில் உள்ளவர்கள் செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்துவடிவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT