காஞ்சிபுரம்

ரூ.1 லட்சம் போதைப்பொருள் பதுக்கியவா் கைது

DIN

உத்தரமேரூா் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூா் கச்சேரி தெருவில் உள்ள மளிகைக் கடையில் ஒருவா் போதைப்பொருட்களை விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தரமேரூா் போலீஸாா் அக்கடையில் சோதனை நடத்தியதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தீபாராம் (24) என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT