காஞ்சிபுரம்

வாக்காளா் அடையாளஅட்டை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்

DIN

ஸ்ரீபெரும்புதூா்: புதிய வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் முத்துமாதவன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பா் 21,22 மற்றும் டிசம்பா் 12,13 ஆகிய தேதிகளில் புதிய இளம் வாக்காளா்கள் சோ்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில் இளம் தலைமுறை வாக்காளா்கள் தங்களை இணைத்துகொண்டு ஒப்புகை சீட்டு பெற்று சென்றனா். இந்த நிலையில் சுருக்கமுறை திருத்தத்தின்போது வாக்காளா் பட்டியலில் முதன்முறையாக பெயா்களை பதிவு செய்தவா்கள் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

படப்பை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற புதிய வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் த.முத்துமாதவன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT