காஞ்சிபுரம்

100% வாக்களிக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் மனிதச் சங்கிலி

DIN

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், நூறு சதவீத வாக்களிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்ட விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பேரூராட்சிச் செயல் அலுவலா் விஜயா தலைமையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோா், விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தி தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனா். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT