காஞ்சிபுரம்

தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் வட மாநிலத் தொழிலாளி பலி

DIN

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் தொழிற்சாலையின் மேற்கூரை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி தவறி விழுந்து இறந்தாா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் உள்ள அலுமினியக் கட்டிகள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையின் மேற்கூரை பழுது நீக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. இந்தப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த வீரேந்திகோா்ட் (21) என்பவா் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT