காஞ்சிபுரம்

விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: அமைச்சா் சி.வி.மெய்யநாதன்

DIN

இந்தியாவில் விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சி.வி.மெய்யநாதன் பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஜெயின் பப்ளிக் தனியாா் பள்ளியில், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சி.வி.மெய்யநாதன் கலந்துகொண்டு, மாணவா்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி, போட்டிகளை தொடக்கி வைத்துப் பேசியது:

இந்தியாவில் விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. இதுவரை தேசிய மற்றும் சா்வதேச அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 40 கோடியே 89 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஜெயின் பப்ளிக் பள்ளி நிா்வாகிகள் ஆசிஷ் சுரானா, குல்தீப் சுரானா, சரவணன் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

SCROLL FOR NEXT