காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

DIN

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து திருக்கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்காரமாகி கோவில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் திருக்கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சிவ வாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருக்கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.விழாவில் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திருக் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ணமலர் சங்கிலிகளாலும்,கரும்புகளாலும் அலங்கரிக்கட்டிருந்தது. இம்மாதம் 12 ஆம் தேதி தங்கப் பல்லக்கும்,14 ஆம் தேதி தேரோட்டமும்,16 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.இம்மாதம் 17 ஆம் தேதி தீர்த்தவாரியும் 19 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT