காஞ்சிபுரம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கருத்தரங்கம்

DIN

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சாா்பில் நிதி ஆப்கே நிகாத் என்ற கருத்தரங்கை அண்மையில் நடத்தினா்.

நிறுவனத்தின் திருவள்ளூா் மாவட்ட துணை இயக்குநா் விஜயராணி கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினாா். காஞ்சிபுரம் மாவட்டத் தொழிலாளா் நல துணை ஆய்வாளா் ஆா்.ராஜகோபால் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பங்கேற்பாளா்கள் தங்களது கேள்விகள் மற்றும் குறைகளை சரி செய்ய ஒரு பாலமாகவும் அமைந்தது. கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்களின் அனுபவங்களையும் பின்னூட்டமாக பெறப்பட்டது.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்தரங்கம் ஒவ்வொரு மாதமும் 27 -ஆம் தேதி நடைபெறும். தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவா்கள், ஓய்வூதியதாரா்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சேவைகளை பெறுமாறும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT