வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா்.  
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கிருத்திகை விழா

தை மாத கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தை மாத கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், தை மாத கிருத்திகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது எலுமிச்சை மலா் மாலை அலங்காரத்தில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளை மலா் மாலைகள் அலங்காரத்தில் கையில் வேலேந்தி வீராசன கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா் மோா், குளிா்பானங்கள், கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT