முகப்பு
காஞ்சிபுரம்

இன்று முதியோா் வீடுகளுக்கு நேரில் அத்தியாவசியப் பொருள்கள்

Updated On : 4 ஜூன் 2026, 2:28 am IST
கோப்புப்படம்
பகிர்:

காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ஜூன் 4 -ஆம் தேதி வியாழக்கிழமை நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தாயமானவா் திட்டம் மாதம் தோறும் கூட்டுறவுத்துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி வியாழக்கிழமை வரும் ஜூன் 6 ஆம் தேதியும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement