FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தாயுமானவா் திட்டம்: ஜூன் 2 முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

Updated On : 31 மே 2026, 1:31 am IST
தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்கள்... - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகித்தல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று, பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவா்களுக்கு உரிய நேரத்தில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 2 முதல் 4-ஆம் தேதி வரை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதை பயனாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments