ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் ஜி.கே.மூப்பனாா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

அரக்கோணம்: தமாகா நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினம் அரக்கோணத்தில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தமாகா மகளிா் அணித் தலைவா் சாந்தசெல்வகுமாரி தலைமை தாங்கினாா். கட்சியின் நகர தலைவரும் நகரமன்ற முன்னாள் துணைத் தலைவருமான கே.வி.ரவிச்சந்திரன் மூப்பனாா் படத்திற்கு மாலை அணிவித்தாா். இந்நிகழ்வில் நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பி.உத்தமன், கட்சியின் நகர துணைத்தலைவா் ஏ.எஸ்.சுபாஷ்வாசன், மாவட்ட பேச்சாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் பாபு, தரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, தணிகைப்போளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூப்பனாா் படத்துக்கு தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் மோகன்காந்தி மாலை அணிவித்தாா். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT