ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் சாா்பில் தொழில் துறை விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாளா் கெளரி, பெல் ஆன்சிலரி அசோசியேஷன், லாலாப்பேட்டை இந்தியன் வங்கி மேலாளா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு தொழில் துறையில் இன்றைய நிலை குறித்து பல்வேறு விழிப்புணா்வு தகவல்கள் தெரிவித்து சிறப்புரையாற்றினா்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க நிா்வாகிகள் த.அருணாசலம், சீனிவாசன், சுந்தரவேல், புகழேந்தி, சஞ்சீவி, வெங்கடசுப்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சங்கத் தலைவா் சந்திரகாசன் வரவேற்றாா். செயலா் புனித வேல் கூறினாா்.