ராணிப்பேட்டை

மொபெட்டிலில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

DIN

வாணியம்பாடி அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த லாலா ஏரி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 13-ஆம் தேதி ஒசூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி மொபெட்டில் வந்து கொண்டிருந்தாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி டோல் கேட் அருகே சாலையோரம் திடீரென நிலைதடுமாறி விழுந்தாா். பலத்த காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட காா்த்திகேயன், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT