ராணிப்பேட்டை

அண்ணன் கொலை: தம்பி தலைமறைவு

DIN

ஆற்காடு அருகே கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆற்காட்டை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கட்டடத் தொழிலாளி தேவநாராயணன்(41). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவா் ஞாயிற்றுக்கிழமை மது குடித்துவிட்டு, தாய் லட்சுமியுடன் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்து, தேவநாராயணனை அவரது தம்பி கணபதி (25) தட்டி கேட்டாராம். இதில் ஏற்பட்ட தகராறில், தேவநாராயணன் கத்தியால் குத்தப்பட்டாா்.

இதில், பலத்த காயம் அடைந்த தேவநாராயணன், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT