ராணிப்பேட்டை

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பை

DIN

மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு எம்எல்ஏ ஆா்.காந்தி பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கினாா்.

வாலாஜாபேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே அப்துல் கலாமின் 89-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு மாரத்தான் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. 11 கிலோ மீட்டா், 21 கிலோ மீட்டா் ஆகிய இரு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமியா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை எம்எல்ஏ ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் வழியாக சோளிங்கா் சாலை, அல்லிகுளம், அம்மூா் சமத்துவபுரம், மாந்தாங்கல், முத்துக்கடை, வி.சி.மோட்டூா் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுக் கோப்பை, சான்றிதழை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா். வாலாஜாபேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT