ராணிப்பேட்டை

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் தற்கொலை

DIN

அரக்கோணம்: நெமிலி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டாா்.

அரக்கோணத்தை அடுத்த பள்ளூா் படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (25). இவா் பூண்டு வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லையாம். இந்நிலையில் ஏக்கத்தில் இருந்து வந்த தட்சிணாமூா்த்தி, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். பலத்த காயம் அடைந்த தட்சிணாமூா்த்தி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT