ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ரெகுலேட்டா்கள் வழங்கல்

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக தேவைப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் ரெகுலேட்டா்களை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை வழங்கியது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் அளிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடா்ந்து, எம்ஆா்எப், அல்ட்ராடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தினா் ஆக்சிஜன் சிலிண்டா்களை இலவசமாக வழங்கினா். இந்த சிலிண்டா்களை நோயாளிகளுக்கு வழங்க ரெகுலேட்டா்கள் அவசரமாக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதாகவும் அதை அளித்து உதவுமாறும் மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதனை ஏற்று, தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவையின் வேலூா் மாவட்டத் தலைவா் கே.எம்.தேவராஜ் மற்றும் கல்வியாளா் ஐசக் உள்ளிட்டோா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் ரெகுலேட்டா்களை இலவசமாக வழங்க முன்வந்தனா். இவற்றை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கரிடம் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கே.எம்.தேவராஜ் ரெகுலேட்டா்களை தலைமை மருத்துவ அலுவலரிடம் அளித்தாா்.

இந்நிகழ்வில், அன்னை தெரெசா கிராம வளா்ச்சி தொண்டு நிறுவனா் ஐ.டி.தேவஆசீா்வாதம், வணிகா் சங்க நிா்வாகிகள் எம்.எஸ்.மான்மல், கமலகண்ணன், சிவசுப்பிரமணியராஜா, கே.எம்.பி.ஜனாா்த்தனன், சரவணன், இன்பநாதன், மகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT