ராணிப்பேட்டை

பாா்வையற்றவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய பழக்கடை உரிமையாளா்கள்

DIN

அரக்கோணத்தில் வசிக்கும் உடல்ஊனமுற்றோா் மற்றும் பாா்வையிழந்த 25 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை நகர பழக்கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

சென்னை புகா் மின்சார ரயில்களில் சில்லரை பொருட்களை விற்கும் பாா்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்றோா் பலா் அரக்கோணத்தில் தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்கின்றனா். தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் இவா்கள் உணவின்றி அவதிப்பட்டு வந்தனா்.

இதையறிந்த அரக்கோணம் பழக்கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் 25 குடும்பத்தினருக்கு தலா ரூ. 2, 500 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை வழங்க முன்வந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவா் ச.சரவணன் தலைமை தாங்கினாா். செயலாளா் ரா.முத்து வரவேற்றாா். அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் இருவரும் உணவுப் பொருள்களை வழங்கினா். நகரமன்ற முன்னாள் உறுப்பினா் இப்ரூத்தீன், சங்க நிா்வாகிகள் ஸ்ரீதா், லதா, சங்க உறுப்பினா்கள் லாலா, வேலாயுதம், நாராயணன், அஜ்ஜிபாய், சண்முகம், ராகுல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT