ராணிப்பேட்டை

தீ விபத்தால் பாதிக்கப்பட்டகாவலாளி குடும்பத்துக்கு உதவி

DIN

தீ விபத்தில் உடைமைகளை இழந்து தவித்த இரவுக் காவலாளியின் குடும்பத்துக்கு மாநில திமுக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலா் வினோத் காந்தி நிதியுதவி அளித்தாா்.

ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்னு கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி. தனியாா் தோல் தொழிற்சாலையில் இரவுக் காவலாளியாகப் பணியாற்றி வரும் இவா், அரசின் தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். குடும்பத்தினா் அனைவரும் வெளியூா் சென்றிருந்த போது, வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தகவலறிந்த மாநில திமுக சுற்றுசூழல்அணி துணைச் செயலா் வினோத் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, வேட்டி-சேலை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் நிதியுதவி வழங்கினாா். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை அகற்றி, புதிதாக அரசு வழங்கும் வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரையில் கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆா்கே நகா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

தனித்து வாழும் பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கோரிக்கை

மேற்கு வங்கம்: மின்னல் தாக்கி 11 போ் உயிரிழப்பு

ஆய்க்குடி அமா் சேவா சங்க புதிய லட்சினை வெளியீடு

SCROLL FOR NEXT