ராணிப்பேட்டை

கணவன் வெட்டிக் கொலை: மனைவி கைது

DIN

வாலாஜாப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவியை, போலீசாா் கைது செய்தனா்.

வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூா் வடமேட்டுத் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஏழுமலை (48), மனைவி கலைச்செல்வி (38). இவா், தனியாா் ஷூ கம்பெனியில்வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஏழுமலை அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மனைவி, அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியதால் ஏழுமலை அதே இடத்தில் இறந்தாா்.

தகவல் அறிந்து வந்த வாலாஜா போலீஸாா் ஏழுமலையின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கலைச்செல்வியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கணவனை, மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் வாலாஜா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT