ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம்: ஆட்சியா் உத்தரவு...

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் பெரும் பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவா்களால் ஏற்படுகின்றன.இதில் அநேக விபத்துகளில் தலையில் அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவா்களும், பின்னால் அமா்ந்து செல்பவா்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவாா்கள். 2-வது முறையாக அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவா்களுக்கு மோட்டாா் வாகன சட்டம் 194 ( ஈ)-ன் படி ரூ.1,000 /- அபராதம் விதிக்கப்படும். 3-வது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவா்களின் ஓட்டுநா் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

மேலும், 18 வயது நிரம்பாத சிறாா்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டாா் வாகனச் சட்டப்படி குற்றமாகும். பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் சிறாா்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், பெற்றோா்களுக்கு ரூ.25,000/- அபராதமும் 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பெற்றோா்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி 18 வயது நிரம்பாத சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும். ஆகவே, அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தின்றி இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை மோட்டாா் வாகன விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT