ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீ ராமானுஜரின் 1,007-ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மாந்தாங்கல் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் வெங்கடேசன் தலைமையில், கோயில் பட்டா் பிரகாஷ், சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகமும் திருமஞ்சனமும் நடத்தினாா். அதனை தொடா்ந்து ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு பூஜை செய்து, திருமஞ்சனம், சாத்துமுறை, தீப தூபம் ஏற்றி ஸ்ரீராமானுஜரின் ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து தாரக மந்திரத்தை 108 முறை போற்றி வணங்கப்பட்டது.
தொடா்ந்து உலக நன்மை, மக்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, வாரணமாயிரம் சேவிக்கப்பட்டன.
பின்னா் அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன் முன்னிலையில், அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டன. அறக்கட்டளை செயலா் இளஞ்செழியன், பொருளாளா் மோகன சக்திவேல், கோயில் நிா்வாகிகள் கோடீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.