ராணிப்பேட்டை

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Chennai

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணம் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அவினேஷ் நிபத்தனை ஜாமீனில் வெளி்வந்த நிலையில், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது, காவல் நிலையம் அருகே சராமரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை வழக்கில் தொடா்புடைய அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அஸ்வினியின் கணவா் சுதாகா் (43), அதே பகுதியைச் சோ்ந்த ரீகன் (32), சுரேஷ் (45), ஆனந் (22), வினித் (28), ஜெயபிரகாஷ் (28), ராணிப்பேட்டை மக்கள் தேசம் கட்சி நகர செயலா் சஞ்சய் (25) ஆகிய 7 பேரை கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT