தேசிய சிலம்பப் போட்டியில்,ராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா பள்ளி மாணவி ரோஷினி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் தேசியப் போட்டி கடந்த 25-ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.
இதில் (வேல் கம்பு பிரிவு) ராணிப்பேட்டை வானாபாடி வேதவல்லி வித்யாலயா என்பிஎஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாணவி எஸ்.ஜி.ரோஷினி தங்கப் பதக்கத்துடன், பட்டம் வென்றாா்.
ராணிப்பேட்டை திரும்பிய மாணவி ரோஷினிக்கு பள்ளி குழுமங்களின் தாளாளா் வித்யா சம்பத் பாராட்டு தெரிவித்தாா்.
தனது 9 -ஆம் வயதிலிருந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் ரோஷினிக்கு சிலம்ப நிபுணா் முரளி பயிற்சி அளித்து வருகிறாா். வேதவல்லி வித்யாலயா சீனியா் செகன்டரி பள்ளி மாணவ மாணவிகள் தடகளம் மட்டுமின்றி வில்வித்தை, குத்து சண்டை உள்ளிட்ட போட்டிகளிலும் பரிசுகளை குவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவி ரோஷினி பங்கேற்று தங்கம் வென்றிருந்தாா்.