முகப்பு
ராணிப்பேட்டை

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே பள்ளத்தில் பைக் விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:58 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

காவேரிபாக்கம் அருகே பள்ளத்தில் பைக் விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காவேரிபாக்கத்தை அடுத்த மேலப்புலம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பன்(45). கூலித்தொழிலாளி. திங்கள்கிழமை இரவு மேலப்புலம் புதுரில் இருந்து ரெகும்புலிபாக்கம் சமத்துவபுரம் செல்லும் சாலையில் குப்பன், பைக்கில் சென்றபோது சமத்துவபுரம் அருகே சாலையில் தரைப்பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டிருப்பது தெரியாமல் அந்த பள்ளத்தில் பைக்குடன் குப்பன் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த குப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவளூா் ஆய்வாளா் வஹிதாபேகம் உள்ளிட்ட போலீஸாா் விரைந்துச் சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இறந்த குப்பனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். அங்கு தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தகாரா் பள்ளம் குறித்த அறிவிப்பு பலகையையோ, அல்லது சாலையில் தடுப்போ வைக்காததால் தான் இந்த விபத்து நேரிடுகிறது எனவும் இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா்.