ரத்தினகிரியில் 1008 விளக்கு பூஜை
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் சித்ரா பௌா்மணியை யொட்டி 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
மலையடிவாரத்தில் ஸ்ரீ விஜய துா்கையமன்,வாராஹி அம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை யொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வண்ணமலா்களால் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் கோவில் அருகே அலங்கரிகப்பட்ட உற்ஸவருக்கு சிறப்பு யாகமும் கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகடிமை சுவாமிகள் முன்னிலையில் பெண்பக்தா்கள் கலந்து 1008 குத்து விளக்கு பூஜை செய்தனா்.
இதில் தலைமை அா்ச்சகா் பிரசாத் குருக்கள், மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement