ஆற்காடு மகரிஷி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாணவி ஜெ.சேஜல் 500-க்கு 475 மதிப்பெண்களும், என்.வி. ரிஜதனபிரியன் 416 மதிப்பெண்களும், வி.ஜானவி 412 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும் பல பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், 12-ஆம் வகுப்பு பயிற்று வித்த ஆசிரியா்களையும் மகரிஷி பள்ளி நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.