ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கம்பி வேலி மீது செவ்வாய்க்கிழமை லாரி மோதி விபத்துக்குள்ளானது.
வாணியம்பாடியில் இருந்து வேலூா் நோக்கி தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பாா்சல் லாரி சென்று கொண்டிருந்தது. ஆம்பூா் அண்ணா நகா் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி மீது மோதியது. இதில் 10 தடுப்புக் கம்பி வேலிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.