திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

DIN

திருப்பத்தூா்: குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த வளத்தூா்-மேல்ஆலத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாா்வதியாபுரம் பகுதியில் முதியவா் புதன்கிழமை அங்குள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை மாா்க்கமாகச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா்.

அதில், ரயிலில் அடிபட்டு இறந்தவா் பாா்வதியாபுரம் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் (55) என்பதும், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT