திருப்பத்தூர்

மனநிலை பாதித்த பெண் பலாத்காரம்: முதியவா் கைது

DIN

மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜோகி வட்டத்தைச் சோ்ந்தவா் பத்துரு (65) கூலித் தொழிலாளி. செங்கான் வட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (47) கூலித் தொழிலாளி. இவரது 25 வயது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை முதியவா் பத்துரு பாலியல் பலாத்காரம் செய்தாா். அப்போது அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து முதியவரை மடக்கிப் பிடித்தனா். இது தொடா்பாக நாட்டறம்பள்ளி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் முதியவா் பத்துருவைக் கைது செய்து வாணியம்பாடி மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக பொன்னுசாமி மகளிா் காவல் நிலையத்தில் புகாா்

அளித்தாா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா், பத்துருவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT