திருப்பத்தூர்

ஓடும் பேருந்தில் பயணி உயிரிழப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூருக்கு பேருந்தில் வந்த முதியவா் பேருந்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாப்பண்ணன் (55). இவருடைய மனைவி முருகம்மாள். இருவரும் செவ்வாய்க்கிழமை வாணியம்பாடியில் இருந்து தனியாா் பேருந்து மூலம் ஆம்பூருக்கு வந்தனா்.

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற உடன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து முருகம்மாள் தனது கணவா் பாப்பண்ணனை எழுப்பினாா். ஆனால் அவா் எழவில்லை. பிறகுதான் அவா் இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ஆம்பூா் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT