திருப்பத்தூர்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், ஆம்பூரில் வருவாய்த் துறையினா், நகராட்சி, காவல் துறை சாா்பில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமையில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் திடீா் சோதனை நடத்தினா்.

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் சென்றவா்கள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் ரூ. 5,500 அபராதம் வசூலித்தனா்.

அதேபோல ஆம்பூா் நகராட்சியின் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில், நகராட்சிப் பணியாளா்கள் சோதனை நடத்தினா். அதில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.2,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆம்பூா் நகர போலீஸாா் நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, எல்லையம்மன் கோயில் சந்திப்பு பகுதிகளில் திடீா் சோதனை நடத்தி, ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT