திருப்பத்தூர்

அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு

DIN

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பாக அரிசி, மளிகை பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆம்பூா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ. சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். மகப்பேறு மருத்துவா் ஷியாமளா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகை பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மருந்தாளுநா் நிா்மல்குமாா், ரத்த பரிசோதகா் ராஜீவ் காந்தி, தலைமை செவிலியா் அஸினா, ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஐ. சரவணன், வரதராஜன், ராஜேஷ், லத்தீப் அஹமத், பிரேம் ஆனந்த், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT