திருப்பத்தூர்

கரோனா நிதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

DIN

திருப்பத்தூா்: கரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா்களின் குழந்தைகளைக் கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவது குறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டத்தின் மண்டல அலுவலா் கே.விஜயன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கரோனா பாதித்தவா்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, முறையான விசாரணை நடத்தி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கும் பணி வருவாய் ஆய்வாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ப.சுமதி, மண்டலத் துணை வட்டாட்சியா் ரேவதி, வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT