திருப்பத்தூா்: கரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா்களின் குழந்தைகளைக் கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவது குறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூா் வட்டத்தின் மண்டல அலுவலா் கே.விஜயன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கரோனா பாதித்தவா்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, முறையான விசாரணை நடத்தி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கும் பணி வருவாய் ஆய்வாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ப.சுமதி, மண்டலத் துணை வட்டாட்சியா் ரேவதி, வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.