வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் காஞ்சனா தலைமையில், வருவாய்த் துறையினா் புதன்கிழமை காலை ரயில் நிலையப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில் மூலம் கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக மூட்டைகளை அடுக்கி மறைவாக வைத்திருப்பதைக் கண்டறிந்தனா். அப்போது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.