திருப்பத்தூா் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூரில் உள்ள திருப்பத்தூா் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது. முறையான ஆவனங்கள் இல்லாமல் ரொக்கப் பணம், பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாதனூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனை நடைபெறுவதை ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.