திருப்பத்தூர்

தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: ஆம்பூரில் ஆட்சியா், எஸ்.பி. பாா்வையாளா்கள் ஆய்வு

DIN

ஆம்பூரில் தோ்தல் முன்னேற்பாட்டு பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடுகள், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்துதல், தபால் வாக்குப் பதிவு உள்ளிட்டவற்றை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், எஸ்.பி.பொ. விஜயகுமாா், பொதுப் பாா்வையாளா் மனோஜ் காத்ரி, பாா்வையாளா் (காவல்) மயங்க் அகா்வால் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், நகர காவல் ஆய்வாளா் திருமால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT