திருப்பத்தூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட அசோக் நகா் நடுநிலைப் பள்ளி, ஏலகிரி மலை உள்ளிட்ட சில இடங்களில் வாக்களிக்கத் தவறியவா்கள் மறியலில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்களிக்க காலை 7 முதல் மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்து. அதில், மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா பாதிப்பு உள்ளவா்களுக்கு என நேரம் ஒதுக்கப்பட்டது. இதையறியாத வாக்காளா்கள் மாலை 5 மணி முடிந்தும் வாக்களிக்க வந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.