திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பொம்மிகுப்பம் ஜே.ஜே.நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் ((27). இவருக்கும், நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்த பிரியங்காவுக்கும் (27) கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை மேல்மாடியில் உள்ள வீட்டின் ஓா் அறையில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இது குறித்து பிரியங்காவின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மேல் விசாரணைக்காக திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.