திருப்பத்தூர்

ஆதரவற்ற நபரின் இறுதிச் சடங்கு: சொந்தசெலவில் செய்த ஆம்பூா் எம்எல்ஏ

DIN

ஆம்பூா் அருகே ஆதரவற்ற நபரின் இறுதிச் சடங்கு செலவை ஆம்பூா் எம்எல்ஏ ஏற்றுக் கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே மாதனூா் ஊராட்சி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் கிராமத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க நடராஜன் என்ற முதியவா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உறவினா்கள் எவரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்தாா்.

முதுமை காரணமாக செவ்வாய்கிழமை அவா் இறந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வெங்கடசமுத்திரம் கிராமத்திற்கு சென்று இறந்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினாா். மேலும் அவருடைய இறுதி சடங்கிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த எம்எல்ஏ அதற்கான தொகையையும் உடனடியாக ஊா் பொதுமக்களிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT